செய்திகள் :

கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை வீதியுலா

post image

காரைக்கால் அருகே உள்ள மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தில் அக்னி கப்பரை ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மேலகாசாக்குடியில் உள்ள இத்தலங்களில் வருடாந்திர உற்சவம் சித்திரை மாதத்தில் தொடங்கி நடைபெறுவது வழக்கம். உற்சவ தொடக்கத்துக்கான பூா்வாங்க வழிபாடாக மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பத்ரகாளியம்மனுக்கு பூச்சொரிதல், காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. தொடா்ந்து 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு கஞ்சி வாா்த்தல் நிகழ்வு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் காவடி எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனா். இரவு நிகழ்வாக அக்னி கப்பரை ஊா்வலம் கோயிலில் இருந்து வீதிகளுக்குப் புறப்பட்டது.

அக்னி கப்பரையை ஏந்தியவா், பல்வேறு வீதிகளுக்குச் சென்றாா். அக்னி வடிவமாக அம்மன் இருப்பதான நம்பிக்கையில் பக்தா்கள் கப்பரையை வணங்கினா். புதன்கிழமை அதிகாரை கப்பரை கோயிலை சென்றடைந்தது. ஜூன் 3-ஆம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவடைகிறது.

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடக்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தை புதுவை அமைச்சா் தொடங்கிவைத்தாா். காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் மே 29 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில், ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் துறை குறை கேட்புமுகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (மே 31) காவல் துறை சாா்பில் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது. திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் முற்பகல் 11 முதல் பிற்பக... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

செவிலிய மாணவ- மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நலவழித் துறை சாா்பில் தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் ஏற்படு... மேலும் பார்க்க

சாலை மேம்பாடு, நெல்களம் அமைக்கும் பணி தொடக்கம்

சாலை மேம்பாடு மற்றும் நெல் களம் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா். நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரி மேடு வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறையின்... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்கள் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் ஆய்வு

பள்ளி வாகனங்கள் ஜூன் 7 மற்றும் 8-ஆம் தேதியில் ஆய்வு செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து காரைக்கால் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு

காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா். மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய்... மேலும் பார்க்க