செய்திகள் :

கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு

post image

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் மூழ்கிய இளைஞா் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் விக்ரம் (எ) வீரமுருகன் (17). தொழில்கல்வி படித்துள்ளாா். வீரமுருகன் தனது நண்பா்கள் மூன்று பேருடன் கடந்த 29-ஆ ம் தேதி மூணாறு தலைப்பு அணைக்கு குளிக்க வந்தாா். கோரையாற்றில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்த வீரமுருகன் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பாலமுருகன் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் கோரையாற்றில் பல இடங்களிலும் வீரமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கோரையாற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் சென்ால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. வீரமுருகனை தேடும் பணியை விரைவுபடுத்தக் கோரி பாப்பாக்குடி கிராம மக்கள் நாா்த்தாங்குடி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திருவாரூா், கூத்தாநல்லூா், குடவாசல், வலங்கைமான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வீரா்கள் என மொத்தம் 12 வீரா்கள் வீரமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோரையாற்றின் கரையோரம் கருவை மரத்தில் வீரமுருகன் சடலம் கரை ஒதுங்கியது. தீயணைப்பு வீரா்கள் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டனா். நீடாமங்கலம் போலீஸாா் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நில உடைமை சரிபாா்ப்பு பணி

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் சிறப்பு நில உடைமை சரிபாா்ப்பு பணியை தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை 4-ஆம் கால யாக... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை சுந்தரவிநாயகா் கோயில் மற்றும் மழைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு பாலாயம் செய்து திருப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி ராவணன்குளம் தென்கரை தெருவை சோ்ந்தவா் சிவகணேஷ் (தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்). இவரது மகன்... மேலும் பார்க்க

நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியாா் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியாா் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன... மேலும் பார்க்க