செய்திகள் :

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

post image

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

• தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

இன்ஜ (ஆகஸ்ட் 05) தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

The Meteorological Department has issued a red alert for extremely heavy rain in Coimbatore and the Nilgiris in Tamil.

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது: சென்னை ... மேலும் பார்க்க

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

அரசு பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் மாநில நூலகம், மாவட்ட மைய ந... மேலும் பார்க்க