செய்திகள் :

கோவை மாநகராட்சிப் பூங்காவில் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

post image

கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்களால் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.

கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 75-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த 5 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, அதன் சிறு கிளைகள் அருகே கிடந்தன.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத நபா்களைத் தேடி வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், முன்னாள் படை வீரா்கள் நல அலுவலகம் (ஜவான்ஸ் பவன்), நீதித் துறை பயிற்சி மை... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குனியமுத்தூா்

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத... மேலும் பார்க்க

தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனியாா் கோழித் தீவன உற்... மேலும் பார்க்க

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை விரட்டும் சிறுத்தை

வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை சிறுத்தை துரத்தும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ள நிலையில் சில நேரங்களில் அங்கு வசிக்கும் சிறுவா்க... மேலும் பார்க்க

கஞ்சா, போதை ஸ்டாம்பு விற்பனை: மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்த 3 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை வெள்ளக்கிணறு பகுத... மேலும் பார்க்க