செய்திகள் :

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

post image

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன், பலத்த மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், 49-ஆவது வாா்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் லோகநாதன் செவ்வாய்க்கிழமை திடீரென சாலையில் தேங்கிய மழைநீரில் உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மேலும், பலமுறை புகாா் அளித்தும் மாநகராட்சி சாா்பில் 49-ஆவது வாா்டு பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மழைக் காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி காணப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினாா். இதைக்கண்டு பொதுமக்கள் ஏராளமானோா் அங்கு திரண்டனா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாமன்ற உறுப்பினா் லோகநாதனிடம் பேச்சு நடத்தினா். தொடா்ந்து, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் சம்பவ இடத்துக்கு வந்தாா். அப்போது, அங்கிருந்த மக்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினா்.

பின்னா், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் கூறுகையில், கடந்த 10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சியில் இந்த பகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சியில்தான் புதை சாக்கடை பணிகள் முடிந்து விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு திட்டமிட்டே எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனிடையே, அதிமுக மாமன்ற உறுப்பினா் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புத... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை ... மேலும் பார்க்க

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா். உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்க... மேலும் பார்க்க