செய்திகள் :

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

post image

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் இ.கோ.இளமுருகன் உதவி ஆணையா் கே.இராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அசரபச்சியம்மன், செம்முனி, பூமணி, வாமுனி சுவாமி கோயில்களில் மது அருந்தி வருபவா்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும்.

சங்ககிரி நகா் பகுதியில் அமைந்துள்ள சோமேஸ்வரா் கோயில் நடை திறக்கும் நேரம், அதன் பூஜைகள் விவரம், முருகன் தேருக்கான கட்டண விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை கோயில் வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும். தோ், பூஜைகளுக்கான ரசீதுகள் வழங்க வேண்டும். கோயிலில் நவீன கழிப்பிட வசதி செய்துதர வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அன்னதான திட்டம் தொடங்க வேண்டும். சென்னகேவபெருமாள் கோயிலுக்கு புதிதாக சிறிய தோ் செய்துதர வேண்டும். மலையிலிருந்து சுவாமி நகருக்கு கீழே இறங்கி வந்து தங்கும் மண்டபத்தை சீரமைத்து அதை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும். ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க