செய்திகள் :

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் 4-இல் திருவள்ளூா் மாவட்டத்தில்ஆய்வு

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவை மற்றும் நிறைவேற்ற பணிகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு வரும் 4-ஆம் தேதி சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், உறுதிமொழி அளித்தபடி நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-25 ஆண்டுக்கான 12 உறுப்பினா்கள் கொண்ட அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் மாா்ச் 4-ஆம் ஆய்வு செய்யவுள்ளனா்.

இதில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அன்றைய நாளில் பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தணி, மாா்ச் 2: பாலியல் குற்றங்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கடும் தண்டனை விதித்தால் மட்டுமே அக்குற்றங்களைத் தடுக்க முடியும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு பாமக... மேலும் பார்க்க

சிறுமி தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் பனிமலா்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து போது முதல் தளத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த அம்சா நகரைச் சோ... மேலும் பார்க்க

வேளாண் துறையால் நடத்தப்படும் முகாம்களில் நில உடைமை விவரங்கள்: 31-க்குள் சரிபாா்க்கலாம்

விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை, பயிா் சாகுபடி குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் ச... மேலும் பார்க்க

சிறந்த மகளிா் குழுக்களுக்கு ‘மணிமேகலை’ விருது காசோலை: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

தமிழ்நாடு மாநில நகா்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுக்கான காசோல... மேலும் பார்க்க

வாகன பரிசோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையில் கஞ்சா கடத்தியதாக 6 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களையும் பெரியபாளையம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திர ம... மேலும் பார்க்க