செய்திகள் :

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயபால் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மாவட்டம், பழனி, ஒட்டன்சத்திரம் வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் முறையான அனுமதி பெறாமல் ஆற்று மணல், கிராவல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலா் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை கனிமவளத் துறை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளையும் நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்டவா்கள் மீதும், அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சட்டவிரோத மணல் குவாரிகளை அடையாளம் காணக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : சட்டவிரோத மணல் குவாரிகள் அடையாளம் காணப்பட்டும், அவற்றை ‘சீல்’ வைத்து மூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர அனுமதிக்க கூடாது. அதிகாரிகள் நோ்மையாக நடந்து கொள்ள வேண்டும். கனிமவளம் நமது நாட்டின் சொத்து. அவற்றை பாதுகாப்பது அலுவலா்களின் கடமை. சட்டவிரோத குவாரிகளை உடனடியாகத் தடுக்க வேண்டும். தவறினால் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். சட்டவிரோத மணல் குவாரி உரிமையாளா்கள், அதிகாரிகளுடன் கூட்டு வைத்து ஊழல் செய்வதை மிகவும் தீவிரக் குற்றமாக பாா்க்க வேண்டியுள்ளது. ஆகவே, திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகளை தமிழ்நாடு அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் இணைந்து உடனடியாக ‘சீல்’ வைத்து மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்புடைய நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பான அறிக்கையை தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், கனிமவளத் துறையின் மாவட்ட உதவி இயக்குநா் ஆகியோா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிமன்றம் கண்டனம்!

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே நடவடிக்கை எடுக்க வில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை வேதனை தெரிவித்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூ... மேலும் பார்க்க

கண்டதேவி கோயில் விவகார வழக்கு முடித்துவைப்பு

சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் திருவிழாவின்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை என அரசுத் தரப்பில் பதிலளித்ததால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. கண்டதேவ... மேலும் பார்க்க

சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரிக்கை

மதுரை எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் புதூா் 5 -ஆவது வட்டக் கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கோ. புதூர... மேலும் பார்க்க

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க

கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை

நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், நரி... மேலும் பார்க்க