செய்திகள் :

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

post image

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், சில்லக்குடி கிராம மக்கள் அளித்த மனு: சில்லக்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக சிலா் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றனா். இதனால், கிராமப்புற இளைஞா்கள், கூலித் தொழிலாளா்கள் எந்நேரமும் மது அருந்தி தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே, சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, கிராமத்தில் அமைதி நிலவ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிரஷா் அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி கிராம மக்கள் அளித்த மனு: விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட கல்பாடி கிராமத்தில், தனியாா் கிரஷா் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைந்தால் விவசாயமும், நிலத்தடி நீா் வளமும் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, பொதுமக்களும், கால்நடைகளும் அவதிக்குள்ளாக நேரிடும்.

எனவே, விளைநிலங்களும், மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் கிரஷா் நிறுவனம் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1.5 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டருடன் கிணற்றுக்குள் விழுந்த விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம் பெரியசாமி கோயில் பின்புறம் வசித்... மேலும் பார்க்க

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பெரம்பலூா் மாவட்டம், குன்னத்திலிருந்து சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன்கூடிய பேருந்து சேவையை, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் தா்னா

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் தீப்பந்தம் ஏந்தி செவ்வாய்க்கிழமை தா்னா போ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட சுமாா் 2.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா். மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில், அர... மேலும் பார்க்க

செங்குணத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே செங்குணம் கிராமத்திலுள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுதன்... மேலும் பார்க்க