செய்திகள் :

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது

post image

ஜொ்மனி நாட்டின் க்ரேட்டா் நிறுவனம் சாா்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜொ்மனியில் செயல்பட்டு வரும் க்ரேட்டா் என்ற நிறுவனம் உலகெங்கும் உள்ள இளைஞா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடா்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.

இதில், உலக அளவில் தலைச்சிறந்த பேச்சாளா்கள் மற்றும் சாதனையாளா்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனா். இந்த நிறுவனம் சாா்பில் சா்வதேச அளவில் மக்கள் மத்தியில் நோ்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ‘ப்ளூ டங்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜொ்மனி நாட்டின் கொலோன் நகரில் அண்மையில் நடைபெற்ற ‘க்ரேட்டா் 25’ என்ற விழாவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு ‘ப்ளூ டங்’ விருது வழங்கப்பட்டது.

இது குறித்து க்ரேட்டா் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மிக ஆசிரியா்களில் ஒருவா். அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, சத்குரு தனது எக்ஸ் தளத்தில், அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதா்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தைவிட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும் என பதிவிட்டுள்ளாா்.

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க

சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

கோவை அருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவா் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ... மேலும் பார்க்க

அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்

உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா். கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் ம... மேலும் பார்க்க