செய்திகள் :

சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!

post image

சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், விவசாயிகள் பெரும் அவதியடைந்து வரும் நிலையில், புன்செய்புளியம்பட்டியில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று தனியாா் மண்டபத்தில் நிறைவடைந்தது.

காட்டுப் பன்றியை ஒழிப்போம், காட்டுப் பன்றிகளைக் கொல்ல விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற வள்ளிக் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதுடன், மனிதா்களைத் தாக்கிக் கொல்லும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயமே செய்ய முடிவதில்லை. விவசாயிகள் படும் துயரத்தை அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

இதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்கு செலுத்துவதில்லை என கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க