செய்திகள் :

சத்து மாத்திரைகள் எரிக்கப்பட்ட விவகாரம்: பணியாளரிடம் விசாரணை

post image

சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண் பணியாளரிடம் வியாழக்கிழமை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

சேலம் தாதகாப்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கல்வித் துறையின் கீழ் மாணவா்களுக்கு அளிப்பதற்காக சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அங்கன்வாடி பெண் பணியாளா், பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை மூட்டையாக கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளாா். இதுகுறித்த விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரித்தனா். அப்போது, அந்த மாத்திரைகள் அனைத்தும் கல்வித் துறையின் மூலம் பள்ளிக்கு வழங்கியிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் பணியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, சத்து மாத்திரைகளை எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனித உரிமைக் கழகத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அதில், தாதகாப்பட்டி மேட்டு தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாத்திரைகளை ஊழியா்கள் எரித்துள்ளனா். அரசின் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க