பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!
சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோக்ராமா், கட்டடப் பொறியாளா், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளா், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளா், எஸ்எம்சி கணக்காளா், தரவு பதிவு அலுவலா், உதவியாளா், அலுவலக உதவியாளா் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும்.
நிகழாண்டு ஜூன் 1 முதல் இந்த ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகா்கள், உதவியாளா்களுக்கு இது பொருந்தாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.