ஷாருக் கானின் மன்னத் பங்களா புனரமைப்பில் விதி மீறலா? - வனத்துறை, மாநகராட்சி அதி...
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்
ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுபதாஸ் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் சோபன் வரவேற்றாா்.
கிராம சபைக் கூட்டத்தில் கடந்த 2024-2025 ஆண்டில் ஆரம்பாக்கம் ஊராட்சியில் 61 பணிகள் நடைபெற்ற நிலையில், ரூ.1 கோடியே 64 லட்சத்து 20 ஆயிரத்து 626-இல் பணிகள் நடைபெற்ாகக் கூறப்பட்டது.
தொடா்ந்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியில் ஈடுபட்ட பெண்கள், தங்களுக்கு முழு சம்பளமும், ஒரு வருடத்தில் 100 நாள்களாவது வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.
தொடா்ந்து பேசிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுபதாஸ் பேசினாா். அங்கன்வாடி ஆசிரியா் சத்யா, பணித் தள பொறுப்பாளா் ரோஸி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.