செய்திகள் :

சமூக நல சங்கம் பாதுகாப்பு வாரியமாக மாற்றம்

post image

புதுவை சமூக நல சங்கமானது சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளா் துறையின் சமூக பாதுகாப்பு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் துறையின் கீழ் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த புதுச்சேரி அமைப்புச் சாரா தொழிலாளா் நலச் சங்கம் 12.05.2025 முதல் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியமாக மாற்றப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளா் சங்கத்தில் பதிவு செய்து முறையாக ஆண்டு சந்தா செலுத்தி வரும் உறுப்பினா்கள் அனைவரும் ‘புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தின்’ உறுப்பினா்களாக மாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வாரியத்தின் சலுகைகள் தொடா்ந்து வழங்கப்பட உள்ளன.

13-08-2025 முதல் புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை நடக்கிறது. அதற்கான விண்ணப்பம் நிறைவு செய்து அளிக்க வேண்டும்.

மேலும் , புதுச்சேரி சமூக பாதுகாப்பு வாரியம் முந்தைய புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் எண் 1. சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி 605 001, என்ற முகவரியில் அதே கட்டடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

3-வது நாளாக அரசு பேருந்துகள் ஓடவில்லை

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்துப் போராட்டத்தால் 3-வது நாளாக புதன்கிழமையும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. 15 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியா்களாகப் பண... மேலும் பார்க்க

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி- எதிா்க்கட்சித் தலைவா்

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை புதுவை யூனி... மேலும் பார்க்க

ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் விற்க முயன்றவா் கைது

புதுச்சேரியில் ரூ.14 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து திமிங்கல எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் திமிங்கல ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்துமேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

சாலை பாதுகாப்பு கமிட்டியில் போதிய நிதி இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாலை மேம்பாட்டுப் பணிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்தாா். புதுவை யூனிய... மேலும் பார்க்க

பாலூட்டும் தாய்மாா்க்கள் 237 பேருக்கு ரூ.36.6 லட்சம் நிதியுதவி

பாலூட்டும் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 237 பேருக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங... மேலும் பார்க்க

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம்: அதிகாரி உள்பட 2 போ் கைது

புதிய ரேஷன் அட்டை வழங்க லஞ்சம் பெற்ாக அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதிய ரேஷன் அட்டை கொடுக்க குடிமைப் பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கேட்பதாக முத்தியால்பேட்டைய... மேலும் பார்க்க