செய்திகள் :

சம்பளத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!

post image

வருமான சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வருமானத்தில் சமத்துவத்தையும் குறிக்கும் குறியீடான கினி (Gini) மதிப்பெண்கள், இந்தியாவுக்கு 25.5 என்ற நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 41.8 என்றும், சீனாவில் 35.7 என்றும் உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து நூறு வரையில் மதிப்பிடப்படும் கினியானது, 100 என்ற நிலையில் இருந்தால், அது தீவிர சமத்துவமின்மையைக் குறிக்கும். அதுமட்டுமின்று, ஜி7 மற்றும் ஜி20 நாடுகளைவிடவும் இந்தியா முன்னணியில் உள்ளது.

இருப்பினும், முதலிடத்தில் 24.1 சதவிகிதத்துடன் ஸ்லோவாக் குடியரசும், இரண்டாம் இடத்தில் 24.3 சதவிகிதத்தில் ஸ்லோவேனியாவும், மூன்றாம் இடத்தில் 24.4 சதவிகிதத்துடன் பெலாரஸும் உள்ளது. அதற்கு நான்காம் இடத்தில் 25.5 சதவிகிதத்துடன் இந்தியா உள்ளது.

இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதைக் காட்டுகிறது.

2011-ல் 28.8-ஆக இருந்த இந்தியாவின் கினி, 2022-ல் 25.5 என்று உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் வருமான இடைவெளிகளைக் குறைப்பதைக் காட்டுகிறது.

2011 - 23 இடையில் 17.1 கோடி இந்தியர்கள், தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது. 2011-ல் 16.2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022-ல் 2.3 சதவிகிதமாகக் குறைந்தது.

India ranks as the world’s 4th most equal society

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க