செய்திகள் :

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

post image

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, 30 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை நாட்டின் நீண்ட கால சர்வதேச விரிவாக்கத்திற்கான முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விமான நிறுவனம் 30 ஏர்பஸ் ஏ350 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்கியது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், 70 விமானங்களுக்கான ஆர்டர் இருக்கும் நிலையில், இப்போது 30 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்குவதாக தெரிவித்தார். அதே வேளையில், விமான நிறுவனம் வரும் ஆண்டுகளில் 900 க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது என்றது.

2030 ஆம் ஆண்டுக்குள் 600 க்கும் மேற்பட்ட விமானங்களை வைத்திருக்க வேண்டும், அதே வேளையில் உலகளாவிய விமான நிறுவனமாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன், இண்டிகோ, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆகிய இடங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது.

உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின், இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் ஆர்டரை 30ல் இருந்து 60 ஆக உயர்த்தியது.

இண்டிகோ மார்ச் 2026ல் முடிவடையும் நிதியாண்டில் குத்தகைக்கு எடுக்கும் போயிங் 787 விமானங்களை, 10 புதிய நகரங்களுக்கு இயக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது ​​430 க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ள நிலையில் சுமார் 2,300 தினசரி விமானங்களை இயக்கியும் வருகிறது.

இதையும் படிக்க: டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 2% மேல் உயர்ந்து முடிவு!

புதுதில்லி: வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தது.கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா... மேலும் பார்க்க

ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!

புதுதில்லி: துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் உற்பத்தியாளர் ஸ்கோடா டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) வெளியீட்டு விலையான ரூ.140க்கு இணையாக பட்டியலிடப்பட்டு பிறகு... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!

மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 29 காசுகள் குறைந்து 85.90 ஆக புதன்கிழமை நிறைவடைந்தது.ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதட்டங்கள் மற்றும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலைகள் ... மேலும் பார்க்க