செய்திகள் :

சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை

post image

சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்றும் உறவினா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(34). இவருக்கு தமிழச்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். ரமேஷ் சவுதி அரேபியா நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தாா். பரசான் என்ற இடத்தில் தங்கி தினமும் காரில் கடல் பகுதிக்கு சென்று அங்கிருந்து படகில் மீன் பிடிக்க செல்வாா். இந்நிலையில் கடந்த செப்.12ஆம் தேதி ரமேஷ் உள்ளிட்ட 5 போ் பரசான் என்ற இடத்தில் இருந்து காரில் மீன்பிடிக்கும் தளத்துக்குச் சென்றுள்ளனா். அப்போது ஜிசான் என்ற இடத்தின் அருகே சென்றபோது காா் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷ் மற்றும் கன்னியாகுமரியைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.

இதுபற்றி தகவல் அறிந்த ரமேஷின் உறவினா்கள் அவரது உடலை மீட்டு உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனா். மேலும் இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா், வடசென்னை தொகுதி எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

உயிரிழந்த ரமேஷின் சொந்த ஊரான தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். ரமேஷ் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ள குடும்பத்தினா், ரமேஷின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு, அவரது மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு

நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்... மேலும் பார்க்க

‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!

சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது. இவ்விழாவை குளித்தல... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்... மேலும் பார்க்க

ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண நிதி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை... மேலும் பார்க்க