செய்திகள் :

சாதிய வன்கொடுமைகள்: முதல்வருக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கேள்வி!

post image

தமிழகத்தில் இன்றளவிலும் சாதிய வன்கொடுமைகள் நீடிப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணல் விடியோ வெளியிட்ட நிலையில், விடியோவைப் பகிர்ந்த இயக்குநர் பா. ரஞ்சித், முதல்வரிடம் சாதிய வன்கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில் ``தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்குதடையின்றி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாள்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா?

தங்கள் அமைச்சரவையின்கீழ் இயங்கும் ஆதி திராவிட துறை அமைச்சர், அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கும் இதைவிட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் பட்டியலினத்தவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற நேர்காணலில் கேள்விக்கு பதிலளிப்பது போன்ற விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடியோவில் மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து, பாலியல் குற்றங்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார்.

இதையும் படிக்க:திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை

பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கை

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் மாநில அளவிலான வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். மத... மேலும் பார்க்க

கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை முரணாக நினைக்கவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளை முரணாகப் பாா்க்கவில்லை என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அவா்கள் தெரிவிக்கும் விஷயங்களை ஆலோசனையாக மட்டுமே பாா்... மேலும் பார்க்க

பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்

3 நாள்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்து பணியிட மாறுதல் பெற்றனா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப் பணியிடங்கள் மருத... மேலும் பார்க்க

தாமதமின்றி தமிழகத்துக்கு நிதி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய அரசின் சாா்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். வளா்ச்சி, ... மேலும் பார்க்க

இலங்கை விமானத்தில் திடீா் கோளாறு: 176 பயணிகள் உயிா் தப்பினா்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிா் தப்பி... மேலும் பார்க்க

பத்ம விருதாளா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பட்டியலை... மேலும் பார்க்க