செய்திகள் :

"சாது மிரண்டால் காடு கொள்ளாது; அதிமுக-வை சீண்டி பார்க்க வேண்டாம்!" - எச்சரிக்கும் சி.விஜயபாஸ்கர்

post image

தி.மு.க ஐ.டி விங் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தவறாக சித்திரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம் வெளியிட்டதாக கூறி, அதற்கு எதிராக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க-வினர் ஆறு புகார் மனுக்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் வழங்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 

admk

"சாது மிரண்டால் காடு கொள்ளாது. அ.தி.மு.க-வை சீண்டி பார்க்க வேண்டாம். சீண்டி பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள். மருத்துவ பணியாளர்கள் தேர்வு ஆணை என்பது அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் வருடத்திற்கு நான்காயிரம் பணியிடங்கள் வெளிப்படுத்தன்மையோடு நிரப்பப்பட்டது. ஆனால், தி.மு.க-வின் நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். தமிழக சுகாதாரத்துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வரும் 2026 - ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் முதலமைச்சராக தமிழகத்தை ஆளப்போகும் எடப்பாடி மீது அவதூறு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. வரும் 2026 - ம் வருடம் தேர்தல் வரும் நிலையில் இதுபோன்று எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது தி.மு.க-விற்கு நல்லதல்ல. மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

admk

சரியான பாடத்தை வரும் 2026 - ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கொடுப்பார்கள். அதனால், வரும் தேர்தலை மனதில் கொண்டாவது இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி விவகாரத்தில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதை மடைமாற்றி கீழடி விவகாரத்தை தி.மு.க-தான் செய்தது போன்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்" என்றார்.

கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!

கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசை... மேலும் பார்க்க

போக்குவரத்து துறையில் சொதப்பும் DMK மாடல் | Iran - Israel War | ADMK TVK | Imperfect Show 20.6.2025

* ஸ்விஸ் வங்கிகளில் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்த இந்தியர்களின் பணம்?* வெளிநாட்டு மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் நடைமுறையை தொடங்கியது அமெரிக்கா!* Iran Vs Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா; ஈ... மேலும் பார்க்க

`நெருக்கடியால் கூட்டணிக்கு வந்துவிடுவேன் என நினைக்கின்றனர்' - திமுக அரசைச் சாடிய ஜெகன்மூர்த்தி

கடந்த ஏப்ரல் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து இ... மேலும் பார்க்க

'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அதிரடி மாற்றம்

இதுவரை தமிழ்நாடு ரேஷன் கடைகளில் PHH மற்றும் PHH AAY அட்டைதாரர்கள் ஒவ்வொரு முறை பொருள்கள் வாங்கும்போதும், இரண்டு முறை கைரேகை பதிவு செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், இனி இரண்டு கைரேகைகள் தேவையில்லை என்று ... மேலும் பார்க்க

'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு அழுத திருச்சி சிவா

நண்பரின் இரங்கல் கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், எம்.பி திருச்சி சிவாவின் நண்பருமான மிசா ராமநாதனின் புகழஞ்சலி கூட்... மேலும் பார்க்க