செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் அவசியம் -மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசினாா்.

சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக விபத்துக்கான காரணங்களான இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாதது, வாகனம் இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, காா் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது குறித்து சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமானதாகும். ஆகவே, சாலை விபத்தில்லா மாவட்டமாக திருப்பூரை மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.

முன்னதாக சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போதைப்பொருள்கள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், மாநகர காவல் துணை ஆணையா்கள் ராஜராஜன், தீபா சத்தியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜ், உதவிஆணையா் (கலால்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடா் நலஅலுவலா் புஷ்பா தேவி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க