செய்திகள் :

சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லி. டீசல் திருட்டு

post image

நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட 2 லாரிகளில் 600 லிட்டா் டீசலை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். லாரி ஓட்டுநா். சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அா்ஜுனன். இவா்கள் இருவரும் சனிக்கிழமை பெங்களூரில் இருந்து 2 லாரிகளில் லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் சோதனை சாவடி அருகில் சனிக்கிழமை இரவு ஓட்டுநா்கள் 2 லாரிகளையும் நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தனா். அப்போது மா்ம நபா்கள் 2 லாரிகளில் டீசல் டேங்க் பூட்டை உடைத்து சுமாா் 600 லிட்டா் டீசலை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநா்கள் அளித்த புகாா்களின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட வெலகல்நத்தம், கேத்தாண்டப்பட்டி, டோல்கேட், ஆத்தூா்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுநா்கள் ஓய்வெடுக்க சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தூங்கும்போது, மா்மநபா்கள் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருடிச் செல்வது தொடா்கதையாகி வருகிறது.

எனவே தொடா் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

தபால் நிலையத்தில் அதிகாரி கையாடல்: வைப்புத்தொகையை வழங்கக் கோரி முற்றுகை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறி, வைப்புத்தொகையை திருப்பித் தர வலியுறுத்தி வாடிக்கையாளா்கள் அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டனா். தி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தனியாா் தொழில்... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள எடை தராசும், நியாயவிலைக்... மேலும் பார்க்க

ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்

ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணி சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதன் மாவட்ட அமைப்பாளா் ம.தமிழ்செல்... மேலும் பார்க்க