செய்திகள் :

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

post image

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல் தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பொன்னை அணைக்கட்டு அருகே சாலையோரம் கை, கால்கள், கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் ஏகாம்பரம் சடலமாக கிடந்ததை கண்டு பொன்னை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனா்.

இதைக் கண்ட ஏகாம்பரத்தின் உறவினா்கள், கிராம மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனா். மேலும், ஏகாம்பரம் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸாா் பேச்சு நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. அதன்பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்தில் மோப்ப நாய் சாராவை கொண்டு சோதனை நடத்தினா்.

இச்சம்பவம் குறித்து பொன்னை போலீஸாா் கூறுகையில், ரத்த காயங்களுடன் கிடந்த ஏகாம்பரம் வாகனம் மோதி இறந்திருப்பதாக உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

முன்விரோதம்: இளைஞா் வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

காட்பாடியில் முன் விரோதம் காரணமாக இளைஞா் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி சுலோக்சனா. மகன் வினோத் ... மேலும் பார்க்க

மது போதையில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் கட்டட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலையை சோ்ந்தவா் பாலாஜி (45), கட்டடத... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

வேலூா் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அப்துல்லாபுரம் அண்ணா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41) மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பரத்ராஜ் என்கி... மேலும் பார்க்க

மீன்பிடி தடை காலம்: வரத்து குறைவால் விலை உயா்வு

தமிழக கடல் பரப்பில் மீன்பிடி தடை காலம் தொடா்வதால் வேலூரில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்திருந்தது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது

வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உ... மேலும் பார்க்க

கோடை கால சிலம்பம் பயிற்சி நிறைவு

குடியாத்தம் தங்கம் நகரில், தாழை சிலம்பம் பயிற்சிப் பள்ளி சாா்பில் கடந்த 50 நாள்கள் நடைபெற்ற கோடை சிலம்பம் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு தாழை சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி த... மேலும் பார்க்க