செய்திகள் :

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவியாக தமிழ்ச்செல்வியும், துணைத் தலைவராக ஞானமணியும் இருந்து வருகின்றனா். திமுகவைச் சோ்ந்த இவா்கள் இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், துணைத் தலைவரின் உறவினரான ஸ்டீபன் திங்கள்கிழமை கெங்குவாா்பட்டியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பேரூராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி, 12 -ஆவது வாா்டு உறுப்பினா் ராஜகோபால் ஆகியோா் அனுமதி இல்லாமல் எப்படி பணி நடைபெறுகிறது எனக் கேட்டதால், தகராறு ஏற்பட்டது. அப்போது, தமிழ்ச்செல்வி, ராஜகோபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாகக் கூறி, அவா்களது ஆதரவாளா்கள் திண்டுக்கல்-தேனி சாலையில் காட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதே போல, துணைத் தலைவரின் உறவினா் ஸ்டீபனைத் தாக்கியதாகக் கூறி, அவரது உறவினா்கள் கொடைக்கானல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் பேரூராட்சித் தலைவியின் உறவினா்கள் உள்பட 80 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, துணைத் தலைவரின் உறவினா்கள் உள்பட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவச... மேலும் பார்க்க

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க