செய்திகள் :

பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை: ஆகஸ்ட் இறுதிக்குள் நிறுவ முடிவு

post image

சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களில் இம்மாத இறுதிக்குள் எண்ம அறிவிப்பு பலகை நிறுவப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஸ்மாா்ட் சிட்டி லிமிட்டெட், பெருநகா் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் ‘இன்டலிஜென்ட் ட்ரான்ஸ்போட் சிஸ்டம்’ என்ற திட்டத்தின் கீழ், இதுவரை 416 பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:

பேருந்து பயணிகளின் வசதிக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 416 பேருந்து நிறுத்தங்களில் இந்த எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 பேருந்து நிறுத்தங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்துக்காக 2600-க்கும் மேற்பட்ட மாநகா் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியுடன் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களிலுள்ள எண்ம அறிவிப்பு பலகை நவீன தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், தங்களுக்கான பேருந்து எந்த இடத்தில் வருகிறது, எத்தனை நிமிஷத்தில் வந்து சேரும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்.

சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து முனையங்கள், பேருந்து நிறுத்தங்களிலும் இந்த எண்ம அறிவிப்பு பலகையை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இத்திட்டம் வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கும் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்றனா்.

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் பெரம்பூா் டான்பாஸ்கோவும், மகளிா் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

இன்று அமைச்சரவைக் கூட்டம்: ஆணவக் கொலை தடுப்பு சட்டம் குறித்து விவாதம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட உள்ளன... மேலும் பார்க்க

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிட தடை விதிக்கக் கோரிய மனுவை ரூ. 10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதனின் த... மேலும் பார்க்க