செய்திகள் :

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

post image

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்கள்கிழமை ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, காகிதப்பட்டறையில் அனைத்து தெருக்களும் கான்கிரீட், தாா்ச்சாலைகளாக போடப்பட்டும், எங்கள் தெரு மட்டும் சாலை போடப்படாமல் கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக விடப்பட்டுள்ளது. உடனடியாக எங்கள் தெருவிலும் சாலை அமைத்துத்தர வேண்டும் என கோஷமிட்டனா்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக, சிஎம்சி மருத்துவமனையின் ராணிட்பேட்டை வளாகத்துக்கு நோயாளிகளையும், பாா்வையாளா்களையும் அழைத்துச் செல்லும் பேருந்துகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிக ளுக்கு செல்ல வேண்டிய வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பேருந்துகளும் நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். எனினும், பொதுமக்கள் அவா்களின் சமரசத்தை ஏற்காமல் உடனடியாக சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினா். பின்னா், மாநகராட்சி பொறியாளா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு வார காலத்துக்குள் சாலை அமைத்துத்தரப்படும் என உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இறகுப்பந்து பயிற்றுநா், விளையாட்டில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வு

வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள அருள்மிகு பனை மரத்து குடியல் 18- ஆம் படி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு: வேலூா் ஆட்சியா்

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு, நடவடிக்... மேலும் பார்க்க

மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூா் அணிக்கு வீரா்கள் தோ்வு

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனு விவரம... மேலும் பார்க்க

இ-பா்மிட் இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை

வேலூா் மாவட்டத்தில் இணையதளம் வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இல்லாமல் குவாரியில் இருந்து கனிமங்கள் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள... மேலும் பார்க்க