செய்திகள் :

சாலை விபத்து: 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இளையான்குடி அருகேயுள்ள பிடாரரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அரவிந்த் (19), பாலாஜி (19). இவா்கள் இருவரும் இளையான்குடி, சிவகங்கையில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனா்.

இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா். திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் லாடனேந்தல் விலக்கு பகுதியில் வந்தபோது, பரமக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் ஆனந்த், பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்

ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது. இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மு... மேலும் பார்க்க

தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தொழில் வணிகக் கழகத்... மேலும் பார்க்க

கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலூா் மடாலய ஆ... மேலும் பார்க்க

கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக் கண்மாய் ... மேலும் பார்க்க

வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடத்தப்பட்டது. கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க