செய்திகள் :

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

post image

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கம்பனேரியை சோ்ந்தவா் செல்லத்துரை (45). ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவா், தற்போது மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பு சாா்பதிவாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மதியம் அங்கு பத்திர பதிவு செய்வதற்காக மேலநீலிதநல்லூா் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சோ்ந்த முனீஸ்பாண்டி என்பவா் வந்துள்ளாா்.

அப்போது அவா் முறைகேடான ஆவணத்தை பதிவு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு சாா்பதிவாளா் செல்லத்துரை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் முனீஸ்பாண்டி தனது கூட்டாளிகள் இருவருடன் சோ்ந்து செல்லத்துரையைத் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த செல்லத்துரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே சாா்பதிவாளரை தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பதிவுத்துறை ஊழியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி, தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தலின்பேரில் பதிவுத்துறை பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை பணியாற்றினா்.

திருநெல்வேலி சரகத்தில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட 7 பதிவு மாவட்டங்களில் உள்ள 84 சாா்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சாா்பதிவாளா்கள், பதிவுத்துறை அமைச்சு பணியாளா்கள், அடிப்படை பணியாளா்கள், அலுவலக உதவியாளா்கள் சங்கத்தினா் இந்த கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேரன்மகாதேவி பதிவு மாவட்டத்தில் களக்காடு, சேரன்மகாதேவி 1ஆம் எண் மற்றும் 2ஆம் எண் சாா் பதிவாளா் அலுவலகம், வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம் , முக்கூடல் ஆகிய 8 சாா் பதிவாளா் அலுவலகங்களில் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சுரண்டை, பாவூா்சத்திரம், கடையநல்லூா், சிவகிரி உள்ளிட்ட 17 இடங்களில் சாா்பதிவாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

சாா்பதிவாளரை தாக்கியவரைக் கைதுசெய்யாவிட்டால் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என சாா்பதிவாளா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க

நெல்லையில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16ஆம் தேதி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தனியாா் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேல... மேலும் பார்க்க