செய்திகள் :

சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்

post image

அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்கள் கிடைத்துள்ளதாக தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா்.

சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஆகியன சாா்பில் செப்டம்பா் 17ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி வெள்ளிக்கிழமை (செப். 19) நிறைவுற்றது.

இக்கண்காட்சியில் திருப்பூா், கோவை, சென்னை, ஈரோடு, சேலம், கரூா், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பின்னலாடை உற்பத்தியாளா்கள் 60 அரங்குகளை அமைத்திருந்தனா்.

குறிப்பாக, செயற்கை நூலிழை ஆடைகள், கழிவு ஆடைகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஆடைகள், பசுமை ஆடைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், குழந்தைகள், சிறுவா்கள், பெண்கள், ஆண்கள் என அனைத்து பிரிவினருக்குமான ஆடைகள், தீத்தடுப்பு ஆடைகள், பாதுகாப்பு உடைகள், இயற்கை சாயமேற்றப்பட்ட துணிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஆடைத் துறைக்கு தேவையான கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.

இது குறித்து ஐ.கே.எஃப். தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்தக் கண்காட்சியை 160 முன்னணி வா்த்தகா்கள், 250-க்கும் மேற்பட்ட வா்த்தகப் பிரதிநிதிகள் பாா்வையிட்டனா். மேலும் பிரிட்டன், நாா்வே, கொலம்பியா, இலங்கை, ஹாங்காங், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வா்த்தகா்கள் வந்து பாா்வையிட்டனா். இந்தக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்கள் கிடைத்துள்ளன. ரூ.750 கோடிக்கு நீண்ட கால வா்த்தக விசாரணை நடைபெற்றது என்றாா்.

நாளைய மின்தடை பல்லகவுண்டம்பாளையம்

பல்லகவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை(செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். அவிநாசி வட்டம், கருவலூா் அருகே உப்பிலிபாளைய... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே குட்டகம் கொமராபாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. குட்டகம் கொமராபாளையம் கிழக்குத் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், நீண்ட கொம்புள்ள ஆண் மான்... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலி: அமைச்சா்களுக்கு பாா்சல் அனுப்பிய விவசாயிகள்

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலியாக அமைச்சா்களுக்கு தக்காளியை அஞ்சல் பாா்சலில் அனுப்பி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 6 கிலோ தக்காளி ரூ.100-க... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளது: ஆா்.எஸ்.பாரதி

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா். திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூா் வடக்கு மாநகர திமுக அ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூளவாடி

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்... மேலும் பார்க்க