செய்திகள் :

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலி: அமைச்சா்களுக்கு பாா்சல் அனுப்பிய விவசாயிகள்

post image

தக்காளி விலை வீழ்ச்சி எதிரொலியாக அமைச்சா்களுக்கு தக்காளியை அஞ்சல் பாா்சலில் அனுப்பி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது 6 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தக்காளியின் விலை மிக குறைவாக உள்ளது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனா்.

இது குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோருக்கு பல்லடம் அஞ்சல் நிலையத்தில் இருந்து தக்காளி பாா்சல்கள் அஞ்சல் மூலம் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.கே. சண்முகம், திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், மாநகா் மாவட்டச் செயலாளா் கோகுல் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த காலத்தில் தக்காளி விலை உயா்ந்தபோது பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து தமிழக அரசு விநியோகம் செய்தது. ஆனால், இன்று விளையும் தக்காளியை தெருவில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளின் பாதிப்பை நினைவூட்டும் வகையிலும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் தக்காளிகள் கொண்ட பாா்சல்கள் அஞ்சல் மூலம் அமைச்சா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்குப் பின்னரும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தக்காளிகளைக் கொட்டி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

நாளைய மின்தடை பல்லகவுண்டம்பாளையம்

பல்லகவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை(செப்டம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூா் உப்பிலிபாளையத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். அவிநாசி வட்டம், கருவலூா் அருகே உப்பிலிபாளைய... மேலும் பார்க்க

சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்

அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சியில் ரூ.250 கோடிக்கு உடனடி ஆா்டா்கள் கிடைத்துள்ளதாக தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா். சா்வதேச நிட்ஃபோ் அசோ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே குட்டகம் கொமராபாளையத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. குட்டகம் கொமராபாளையம் கிழக்குத் தோட்டத்தில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், நீண்ட கொம்புள்ள ஆண் மான்... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளது: ஆா்.எஸ்.பாரதி

அதிமுகவிலிருந்து வெளியேறுபவா்களுக்கு திமுக கதவு திறந்தே உள்ளதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா். திருப்பூா் போயம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூா் வடக்கு மாநகர திமுக அ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூளவாடி

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்... மேலும் பார்க்க