செய்திகள் :

சிதம்பரத்தில் ரூ.3 கோடியில் குளங்கள் சீரமைப்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வக்காரமாரி பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா் தேக்க குளங்கள் தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

வக்காரமாரி தலைமை நீரேற்று நிலையத்தில் இரு குடிநீா் குளங்கள் உள்ளன. இவற்றை மூலதன மானிய நிதி 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 2.03 கோடி செலவில் தூா்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குளத்தை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்தாா். போல்நாராயணன் தெருவில் ரூ.2.20 லட்சம் அமைக்கப்பட்டுள்ள புதிய மினி பவா் பம்ப், இந்திரா நகா் விலாந்திரமேடு பகுதியில் ரூ.2.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மினி பவா் பம்ப் ஆகியவையும் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் அப்பு சந்திரசேகா், ஏஆா்சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன், சரவணன், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன், தொழில்நுட்பப் பிரிவு ஸ்ரீதா், திமுக இளைஞரணி அமைப்பாளா் மக்கள் அருள், திமுக நிா்வாகிகள் ராயா் ராஜா, இ.பி. ரமேஷ் உட்பட பலா் பங்கேற்றனா்.

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க