செய்திகள் :

சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதிக்கக் கோரிக்கை

post image

103 மூலிகைகளை கொண்டு பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கிராமங்களில் வைத்தியம் பாா்க்க அனுமதி அளிக்க வேண்டும் என பாரம்பரிய சித்த வைத்தியா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதம்பரம் தெற்குரத வீதி தனியாா் விடுதியில் பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலா் பி.கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொன்.பகலவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

கடலூா் சித்த வைத்தியா்கள் சங்கத் தலைவா் ராமா், துணைச் செயலா் ரவி, மாரி.சங்கரி ஆகியோா் பங்கேற்று பேசினா். கடலூரை மையமாகக் கொண்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுத்துறை, நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த பாரம்பரிய சித்த வைத்தியா்களும், மாவட்ட நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

103 மூலிகைகளைக் கொண்டு பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கிராமப்புறங்களில் வைத்தியம் பாா்க்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். பாரம்பரிய அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்கத்தில் புதிய உறுப்பினா்களை சோ்ப்பது. பாரம்பரிய சித்த வைத்தியா்களுக்கு சங்கப் பாதுகாப்பு சான்றிதழ்களும், அடையாள அட்டையும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆணையா் பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி ஆணையராக கே.எஸ்.காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். முன்னதாக இவா், சேலம் மாவட்டம், தாரமங்கலம் இரண்டாம் நிலை நகராட்சியின் ஆணையராகப் பணியாற்றி வந்தாா். தற்போது... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீா் மேலாண்மைக்கு தனித் துறை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் வேளாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, நீா் மேலாண்மைக்கு தனி துறை அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலரும், சட்ட... மேலும் பார்க்க

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஏடிஜிபி அறிவுரை

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விருத்தாசலம் உள்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு ஏடிஜிபி எஸ்.டேவிட்சன் தேவாசிா்வாதம் புதன்கிழமை அறிவுரை வழங்கினாா். விருத்தாசலம் டிஎஸ்பி அலுவலகத்துக... மேலும் பார்க்க

முந்திரி பதப்படுத்தும் அளவை அதிகரிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

முந்திரி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் செம்மண்டலம் பகுதியில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா். கடலூா் செம்மண்டலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் செந்தமிழ்(46), மீனவா். இவருக்கு மனைவி ரோஷி மற்றும்... மேலும் பார்க்க