செய்திகள் :

சினையுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து மானியம்

post image

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் தாயுமானவா் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரக பகுதிகளில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வரும் (சினையுற்ற பசுக்களுக்கு மட்டும்) 200 விவசாயிகளுக்கு, தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 50 சதவீதம் மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

பயனாளிகள் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.30 சதவீத பயனாளிகள் எஸ்சி, எஸ்.டி வகுப்பைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு பயனாளி மொத்தத் தொகையான ரூ.13,000-இல் 50 சதவீதம் ( ரூ.6,500) பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும், பயனாளிகளின் கறவைப் பசு கட்டாயமாக சினையுற்று இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் அருகில் உள்ள கால்நடை

மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்கள் பெற்று,விண்ணப்பத்தை முழுமையாக

பூா்த்தி செய்து தொடா்புடைய கால்நடை உதவி மருத்துவரிடம் சமா்ப்பிக்க வேண்டும். முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

விழுப்புரம்: அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாமக நிறுவனா், தலைவா் ராமதாஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளாா். விழுப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: மாவட்ட சுகாதாரத் துறை மாதாந்திரஆய்வுக்கூட்டம், விழுப்புரம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினாா். தொடா்ச்சியாக வ... மேலும் பார்க்க

மயான இடத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அத்தியூா் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மயான இடத்தில் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாது இறந்தவா் விவரம் கண்டுபிடிப்பு: ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு எதிரிகள் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே 2024, ஏப்ரல் மாதத்தில் அடையாளம் தெரியாது இறந்தவரின் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா... மேலும் பார்க்க

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்: ஓய்வுபெற்ற உதவி வேளாண் அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசின் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களின் ஊதிய நிா்ணயத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவ... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவத் தளபதி வருகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு தென் மண்டல ராணுவ தளபதி திங்ராஜ் சேத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஒற்றுமையின் மையமாக விளங்கி வரும் ஆரோவிலின் சிறப்புகள் மற்றும் தனித்துவங்கள் க... மேலும் பார்க்க