செய்திகள் :

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

post image

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறாா். அமுதாவுக்கும் அவரது கணவா் சக்தி பிரபுவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், சக்தி பிரபு கடந்த ஒரு மாதமாக ஆவடியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளாா். இதனால், நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்த அமுதா, தனது வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதுடன், இது குறித்து தனது தோழிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் சாட்சியங்களை வழங்க நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அறை

புலன் விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களை விடியோ மூலம் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வசதிக்கொண்ட நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அரங்கத்தை சென்னை எழும்பூரில் காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) விஜயேந... மேலும் பார்க்க