செய்திகள் :

சிபிஎஸ்இ மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

post image

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 83.39 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது.

இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களை விட 5.94 சதவீத மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2024-ல் 18,417 பள்ளிகளில் 7,126 தேர்வு மையங்களும், 2025ஆம் ஆண்டில் 19,299 பள்ளிகளில் 7,330 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டது. அதில் 2024ல் தேர்வுக்கு 1633730 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 1621224 பேர் தேர்வெழுதினர். அதில் 1426420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 87.98 சதவீதமாகும்.

2025ஆம் ஆண்டில் தேர்வுக்கு 1704367 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 1692794 பேர் தேர்வெழுதினர். அதில் 1496307 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 88.39 சதவீதமாகும்.

அதாவது இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 0.41 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025ல் மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்

விஜயவாடா - 99.60

திருவனந்தபுரம் - 99.32

சென்னை - 97.39

பெங்களூரு - 95.95

மேற்கு தில்லி - 95.37

கிழக்கு தில்லி - 95.06

சண்டீகர் - 91.61

பஞ்ச்குலா - 91.17

புணே - 90.93

அஜ்மீர் - 90.40

புவனேஸ்வர் - 83.64

குவஹாத்தி - 83.62

டேராடூன் - 83.45

பாட்னா - 82.86

போபால் - 82.46

நொய்டா - 81.29

பிரயாக்ராஜ் - 79.53

மண்டல வாரியாக விஜயவாடா முதலிடத்திலும், திருவனந்தபுரம் இரண்டாமிடத்தையும், சென்னை மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க