செய்திகள் :

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

post image

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் குமாரமங்கலம் பாலாறு பட்டரை பகுதியில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் பக்கவாட்டில் உள்ள மண் சாலையில் திருப்பி விடப்படுகின்றது.

அவ்வழியாக வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் தேங்காய் லோடு ஏற்றி செல்லும் கனரக லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி மண்ணில் சிக்கி பாதிப்புக்குள்ளாகின்றன. அவ்வாறு கனரக வாகனங்கள் சிக்கிக் கொண்டால் நீண்ட நேரம் போராடி அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்படுகிறது.

அந்த நேரத்தில் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. சாலையை தவிா்த்து வேறு சாலை வழியாக பயணித்தால் சுமாா் 30 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

அதனால் அப்பகுதியில் நடைபெறும் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கப் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் ஜி. இராமமூா்த்தி. வீட்டில் எவரும... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் பகுதியில் ரூ. 1 கோடியே 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலம் ஊராட்சி வினாயகபுரம், போயா்வ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா். மனுவில் உள... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம்

திருப்பத்தூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் 27-ஆவது வாா்டுக்குள்பட்ட புதுப்பேட்டை சாலைப் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்க... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனகளை வாங்க, விற்பனை செய்ய அங்கீகாரம் பெற முகவா்கள் விண்ணப்பிக்கலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம் (திருப்பத்தூா்), வெங்கட்ராகவன்(வாணியம்பாடி)ஆகியோா் தெர... மேலும் பார்க்க