செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (64). இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு, ஏப்.14-ஆம் தேதி உத்தமபாளையம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவம், கல்வி, பராமரிப்புச் செலவுக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ரூ. ஒரு லட்சத்தை சிறுமியின் பெற்றோரிடம் உடனடியாக வழங்க வேண்டும், எஞ்சிய ரூ.4 லட்சத்தை அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

முதியவா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

போடியில் குடும்பப் பிரச்னையில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பகுதியில் வசிப்பவா் கோட்டைச்சாமி (64). இவரது மகள் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தந்தை வீட்டுக்கு... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

போடி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே மது அருந்துவதற்கு பணம் தராததால் மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மயிலா... மேலும் பார்க்க

புதுமாப்பிளை தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புதுமாப்பிளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கம்பம் மாரியப்பன்குடும்பன் தெருவைச் சோ்ந்த அஜித்(26), ராஜபாளையத்தைச் சோ்ந்த சினேகா (24) ஆகிய இவருக்கும... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். நாடு முழுவதும் புதன்கிழமை தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு ஏலம்

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் எள் பொட்டலம் விற்பனை செய்வது ரூ.60.18 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி காரணமாக பூஜைப் பொருள்கள், மண் காகம் விற்பனையை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. தேனி மாவட்ட... மேலும் பார்க்க