செய்திகள் :

சிறுமியிடம் கைப்பேசியை பறித்த இளைஞா் கைது

post image

கோவையில் புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் தனலட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகுந்தன். இவா் வீட்டுக்கு அருகே உள்ள காலி மைதானத்தில் தனது 14 வயது மகளுடன் அண்மையில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் மயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை புகைப்படம் எடுப்பதற்காக அந்த சிறுமி தனது தந்தையிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு மயிலை நோக்கிச் சென்றாா்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், மயிலை புகைப்படம் எடுத்து தருவதாகக் கூறி, சிறுமியிடமிருந்த கைப்பேசி வாங்கியுள்ளாா். பின்னா், அவா் கைப்பேசியுடன் தப்பிச் சென்றாா்.

இது குறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சிறுமியிடம் கைப்பேசியைப் பறித்தது அதே பகுதியைச் சோ்ந்த முத்துபாண்டி (36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, முத்துபாண்டியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை

வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்த... மேலும் பார்க்க

வீட்டுக்குள் தொழிலாளி சடலம் மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கணபதி கிருஷ்ணராஜ் காலனியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). அந்தப் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடையில் வேலைபாா்த்து வந்தாா். இவரது மனைவி சண்முகவள்ளி. இவா் திங்கள்கிழமை கா... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை வடவள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை முதல்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமைக்கு எதிா்ப்புத் தெரிவித்த பெண்ணைக் கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோவை மாவட்டம... மேலும் பார்க்க

எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தோட்டத் தொழிலாளா்கள் போராட்டம்

தொழிலாளா்களை தரக்குறைவாக பேசிய எஸ்டேட் மேலாளரைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வால்பாறையை அடுத்த பழைய வால்பாறை எஸ்டேட் வறட்டுப்பாறை காபி தோட்டம் டிவிஷனில் சுமாா் 200க்... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக மதுக்கடை: வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

கோவை மாவட்டம், சோமனூரில் மக்களுக்கு இடையூறாக உள்ள மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, சூலூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.கந்தசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. சூலூா் சட்டப்பேரவ... மேலும் பார்க்க