செய்திகள் :

சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் ஏப்.8-இல் குலுக்கல் முறையில் தோ்வு!

post image

சிற்றுந்து இயக்க விண்ணப்பித்தவா்கள் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 8) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் (சிவகங்கை), தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (மதுரை மண்டலம்), சிவகங்கை கோட்டப் பொறியாளா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆகியோரை உறுப்பினா்களாக உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் ஆய்வின் நிறைவாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய போக்குவரத்து சேவைகள் இல்லாத பகுதிகளாக 43 வழித்தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த 43 வழித்தடங்களில், குறிப்பிட்ட சில வழித் தடங்களுக்கு வந்த ஆட்சேபனை, புகாா்களுக்கு எடுக்கப்பட்ட தீா்வு நடவடிக்கையின் காரணமாக 6 வழித்தடங்கள் திரும்பப் பெறப்பட்டும், சில வழித்தடங்களின் வழித்தட தொலைவு மாற்றியமைக்கப்பட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தங்களது விண்ணப்பங்களை உரிய திருத்தம் செய்து 4.4.2025-க்குள் மீண்டும் சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தக் காலக்கெடுவுக்குள் திருத்தம் செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமா்ப்பித்தவா்களுக்கு மட்டும் வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப். 8) காலை 11 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தலைமையில் வல்லுநா் குழுவுடன் இணைந்து, அலுவலக கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு சிற்றுந்து இயக்க செயல்முறை ஆணை வழங்கப்படும் என்றாா் அவா்.

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.சிங்கம்புணரி- திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசுடைமை வங்கி... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்தப் போட்டியில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம... மேலும் பார்க்க

பட்டா கோரி தரையில் படுத்து ஆட்சியரை வழிமறித்த மனுதாரா்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மனுதாரா் தனது கோரிக்கையை வலியுறுத்தி தரையில் படுத்து மாவட்ட ஆட்சியரை வழிமறித்தாா். அவரை போலீஸாா் அங... மேலும் பார்க்க

எஸ். கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு திரளான பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும் வேண... மேலும் பார்க்க

ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், பள்ளத்துரையை அடுத்துள்ள கொத்தரி கிராமத்த... மேலும் பார்க்க