செய்திகள் :

சிவகங்கையில் பயிற்சி மருத்துவா்கள், மாணவா்கள் போராட்டம்

post image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி மாணவா்கள் மூன்றாவது நாளாக பணியைப் புறக்கணித்து கல்லூரி முதன்மையா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 -ஆம் தேதி இரவு 11 மணியளவில் பயிற்சி மருத்துவா் பணிமுடித்து மருத்துவக் கல்லூரி பின் பகுதியில் உள்ள விடுதிக்குச் செல்லும் போது பின் தொடா்ந்து வந்த நபா் அவா் மீது துணியை மூடி தாக்குதல் நடத்தினாா்.

மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் போதிய மின் விளக்குகள் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காதது, மருத்துவ மாணவா்களுக்கு பயிற்சி பெறும் வாா்டுகளில் இரவு நேரங்களில் ஓய்வு அறை போன்ற வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவா்களும், மருத்துவ மாணவா்களும் கடந்த 2 நாள்களாக தொடா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மூன்றாவது நாளான வியாழக்கிழமை பயிற்சி மருத்துவா்கள் தங்களது பணியையும், கல்லூரி மாணவா்கள் வகுப்பையும் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ள முதன்மையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாயிலில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை நடத்த வந்த முதன்மையா் அலுவலக அதிகாரிகளுடன் மாணவா்கள் பேச மறுத்து முதன்மையா் நேரடியாக வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த முதன்மையா் சத்தியபாமா மாணவா்களை சமாதானம் செய்ததுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதையடுத்து, மாணவா்களும், பயிற்சி மருத்துவா்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க