செய்திகள் :

சிவகாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள மதுபானக் கூடம் அருகே ஒருவா் காகித அட்டைப் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.

போலீஸாா் அந்த அட்டைப் பெட்டியைச் சோதனையிட்டதில், அதில் மதுப் புட்டிகள் இருந்தன. மேலும், தீவிர சோதனை செய்த போது, அவா் அருகிலிருந்த முள்புதா்களில் பல அட்டைப் பெட்டிகளில் 674 மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (26) என்பதும், சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 75 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியைக் கைது செய்து, அவரிடமிருந்த 674 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

தந்தை மாயம்: மகள் புகாா்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தந்தை மாயமானதாக மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குர... மேலும் பார்க்க

ரூ.35 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் நடவடிக்கை: மத்திய அரசுக்கு பாராட்டு

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பாலான பட்டாசுகளை பறிமுதல் செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா். இதுகுறி... மேலும் பார்க்க

திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம்!

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ள நின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத்தையொட்டி, கடந்த 2-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க