செய்திகள் :

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

post image

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொடர் கனமழை பெய்துள்ளது. இதனால், அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடெகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உடல்கள் தாதிங் மற்றும் சிட்வான் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 6 சீனர்கள் உள்பட 20 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், நேற்று (ஜூலை 8) அதிகாலை 3.15 மணியளவில் அங்கு அமைந்திருந்த சீனா - நேபாளம் எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இத்துடன், வெள்ளத்தில் அம்மாவட்டத்தின் 4 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதால், 211 மெகா வாடஸ் அளவிலான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க