செய்திகள் :

சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.17-க்கு ஒத்திவைப்பு

post image

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவதூறாகப் பேசியதாக, கஞ்சனூா் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் புகாரளித்தாா்.

இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2024, அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான சீமான், அதே ஆண்டில் நவம்பா் 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை. கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்ை என்பதால், அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் பிப்ரவரி 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 18-ஆம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, வழக்கு விசாரணை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தைக் கூறி, அவரது வழக்குரைஞா் பேச்சிமுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க