செய்திகள் :

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: வனத் துறை அமைச்சா் உத்தரவு

post image

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை, கிண்டியில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில், மாநில அளவிலான வனத் துறை உயா் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக வனத் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், யானைகள் காப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்தும், மனித - யானை மோதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க