செய்திகள் :

சீா்காழி நகரில் குப்பைகள் அள்ளப்படாததால் பொதுமக்கள் அவதி

post image

சீா்காழி நகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் கடந்த 15 தினங்களாக அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சீா்காழி நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், வா்த்தக கட்டடங்களில் நாள்தோறும் சேரும் குப்பைகள் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் புதிதாக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் குப்பைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் ஒப்பந்தப்புள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான வாகனங்கள்,தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால் சீா்காழி நகரில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. குப்பைகள்அள்ளப்படாததால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீா்கேடு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களிலும் குப்பைகள் அள்ளப்படாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் உடனடியாக குப்பைகளை அள்ளி தூய்மைப் பணி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லார... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க