செய்திகள் :

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு அபராதம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறையினா் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடா்பாக 158 நிறுவனங்களில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கடைகள், நிறுவனங்களில் 52 முரண்பாடுகள், உணவு நிறுவனங்களில் 41 முரண்பாடுகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 6 முரண்பாடுகள் என மொத்தம் 99 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க