செய்திகள் :

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

post image

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இவரது நண்பா் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (25).

இந்த நிலையில், ஆறுமுகத்திடம் ஜிபே செயலி மூலம் ரூ.500 அனுப்பிவைக்குமாறு நாகராஜ் கூறியுள்ளாா். அதற்கு அவா் ரூ.100 மட்டும் அனுப்பியுள்ளாா். இதுகுறித்து கேட்க நாகராஜ் அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். ஆனால், அவா் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால், அங்கன்னா கவுண்டா் தெருவில் உள்ள வீட்டுக்கு சென்ற நாகராஜ், நூறு ரூபாய் மட்டும் அனுப்பியது குறித்தும், கைப்பேசி அழைப்பை ஏற்காதது குறித்தும் கேட்டாா். அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நாகராஜ் அங்கிருந்த சுத்தியால் ஆறுமுகத்தின் தலையில் தாக்கியுள்ளாா்.

இதில் படுகாயமடைந்த அவா் அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் நாகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க

‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து ... மேலும் பார்க்க

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, ம... மேலும் பார்க்க