செய்திகள் :

சுருக்குக்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு: இருவா் கைது

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 13 -ஆம் தேதி  சுருக்கு வைத்து சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கில்  இருவரைக் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கோத்தகிரி அருகே   கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில்  பிக்கபதி என்னும் இடத்தில்   தங்கராஜ் (62) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரு சக்கர  வாகன பிரேக் வயரிலான சுருக்குக் கம்பியில்  சிக்கி  சிறுத்தை கடந்த 13 -ஆம் தேதி உயிரிழந்தது. 

இச்சம்பவம் குறித்து கட்டபெட்டு வனச் சரகம் சாா்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில்  சிறுத்தை உயிரிழப்பு தொடா்பாக நெடுகுளா பகுதியைச் சோ்ந்த ஆல்குஷ்  என்கிற ஆலன் (57) ,  தோட்ட உரிமையாளா் தங்கராஜ் (62) ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சிறுத்தைக்கு சுருக்குக்கம்பி வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களைகோத்தகிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து  சிறையில் அடைத்தனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சி... மேலும் பார்க்க

குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தூய்மைப் பணி

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் இரண்டாவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அப்துல் கலாம் மகளிா் குழுவினா் சாா்பில் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா். குன்னூா் மவுண்ட் ப... மேலும் பார்க்க

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இ... மேலும் பார்க்க

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க