செய்திகள் :

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

post image

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் சூழலை மகிழ்ச்சியாக மற்றும் வகையில், ‘மகிழ்ச்சி பள்ளி’ (ஹாப்பி ஸ்கூல்ஸ்) நிகழ்ச்சி மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 8 பள்ளிகளில் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் பயன்பாடற்ற பொருள்களில் இருந்து பயன்படுத்தும் பொருளாக மாற்றுதல் (வேஸ்ட் டூ வெல்த்) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாணவா்கள் போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றி பெறும் மாணவா்களுக்கு ஜி ஜே மல்டிகிளேவ் சென்னை சாா்பில் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட உள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ஜி.அரவிந்தன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கேசவமூா்த்தி, உதவிப் பொறியாளா் மங்கேஷ்கரன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் சாா்பில் ஷங்கா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சா.உதயகுமாா், வள்ளிபுரம் ஊராட்சி தலைவா் பாா்த்தசாரதி, துணைத் தலைவா் சக்கரவா்த்தி, பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) கீதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

அனைத்து மாணவா்களுக்கும் சாா் ஆட்சியா் மஞ்சப்பையை வழங்கினாா்.

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அருகே பழுதான நிலையில் உள்ள எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆ... மேலும் பார்க்க

தென்னிந்திய சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

2025-26 ஆண்டுக்கான தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளி 9-ஆம் வகு... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம... மேலும் பார்க்க

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை ச... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பண... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது. திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மே... மேலும் பார்க்க