செய்திகள் :

சூலூரில் பள்ளி மாணவா்களுக்கு குட்கா விற்பனை: 141 கிலோ குட்கா பறிமுதல்

post image

சூலூா் அருகே கருமத்தம்பட்டி அடுத்து எலச்சிபாளையம் பகுதியில் பள்ளி மாணவா்கள் புத்தகப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆன குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீசாா் அப்பகுதியில் நடைபெற்ற சோதனையில் மளிகை கடையில் இருந்து 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவா்களின் புத்தகப் பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி ஆசிரியரால் கண்டறியப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினா் நடத்திய சோதனையில், மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஆசிரியா்கள் மாணவா்களின் பைகளை சோதனை செய்தபோது, ஆறாம் வகுப்பு மாணவா்களிடம் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பள்ளி நிா்வாகம் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவித்தது. மாணவா்களிடம் விசாரித்த அப்பகுதி இளைஞா்கள், எலச்சிபாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் குட்கா வாங்கியதாகவும், அக்கடையின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலையடுத்து, காவல்துறையினா் மளிகைக் கடையில் சோதனை நடத்தி 141 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கிராம மக்கள், ‘மாணவா்கள் மிட்டாய் என நினைத்து போதைப் பொருட்களை உட்கொண்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. குழந்தைகளின் எதிா்காலம் கருதி, காவல்துறை கடைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி நிா்வாகம் மாணவா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்,‘ என்று கோரிக்கை விடுத்தனா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க